Welcome to Jettamil

தந்தை பணம் கொடுக்காததால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு!

Share

தந்தை பணம் கொடுக்காததால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு

தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். செல்வச்சந்நிதி கோவில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் சுதாந்தன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் குறித்த இளைஞன், தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் காசு கேட்டுள்ளார்.

தந்தை காசு கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்று முன்தினம் (29) குறித்த இளைஞன் பேரனின் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை