தமிழீழத் தேசிய மாவீரர் நாளில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் மகள் துவாரகாவின் பெயரில் வெளியான காணொளியை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
கிடைக்கப் பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், தமது அவதானங்களின் வழி நின்றும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமர் விசுவநாதன் ருத்ரகுமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.