Welcome to Jettamil

வடமராச்சி – பருத்தித்துறை, கரணவாய் பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் வீடுகள் பல சேதம்…

Share

யாழ்ப்பாணம், வடமராச்சி, கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரணவாய் பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதன்போது 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கரணவாய் பகுதியின் j /348 மற்றும் j / 350 பிரிவுகளிலேயே இவ் சேத விவரங்கள் பதிவாகியுள்ளது.

அத்துடன் 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை