யாழ்ப்பாணம், வடமராச்சி, கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரணவாய் பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதன்போது 19 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கரணவாய் பகுதியின் j /348 மற்றும் j / 350 பிரிவுகளிலேயே இவ் சேத விவரங்கள் பதிவாகியுள்ளது.
அத்துடன் 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திடீரென பெய்த மழை காரணமாக 119.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.