மீண்டும் மக்கள் ஆணையை இழந்திருக்கிற மொட்டு கட்சியின் பிடிக்குள் நாடாளுமன்றம் தொடர்ந்தும் இருப்பது இன்றும் நிரூபணமாகி இருப்பதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதாவது தனது முகப்புத்தகத்தில் இவ் விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இந் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று அநுர குமார திசாநாயக முக்கிய கருத்தொன்றை கூறினார்.
டலஸ் அழகப்பெரும அவர்களுக்கு ஆதரவு வழங்கிய குழுக்கள் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 113 ஐ விட அதிகமானது. அப்படியானால் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.





