ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நிகழ்வில், அரசுப் பணத்தை முறைக்கேடாகப் பயன்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அவர் முன்னிலையானபோதே, நீதவானால் வழக்கு ஜனவரி 28, 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





