இன்று சீன ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள அநுர
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கவுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட எதிர்பார்ப்பு
இலங்கை மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.