மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (05) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், ஹங்வெல்லவில் இருந்து அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது, இது 150.5 மி.மீ.
கேகாலை மாவட்டத்தின் வஹ்ரக பிரதேசத்தில் 133 மில்லிமீற்றர் மழையும், அவிசாவளை பிரதேசத்தில் 114 மில்லிமீற்றர் மழையும் பெய்துள்ளது.
இதேவேளை, தென்மேற்கு பருவக்காற்று செயற்படுவதன் காரணமாக புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, அடுத்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களில் கடற்தொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலையும் விடுத்துள்ளது.