தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான சந்தர்ப்பங்களையும் மக்கள் வழங்கிய அதிகாரத்தினையும் வீணடிக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸத்தர்கள், அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரங்களை மக்கள் எமக்கு வழங்கியிருந்தால்,நாட்டில் உள்ள கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். நல்லாட்சிக் காலத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த கூட்டமைப்பினர், தமது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாத நிலையில், தற்போது ஈ.பி.டி.பி. யை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான சந்தர்ப்பங்களையும் மக்கள் வழங்கிய அதிகாரத்தினையும் வீணடிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டங்கள், கோசங்கள் போடுவதாலோ அல்லது வெறுப்புத் தன்மையினை வெளிப்படுத்துவதின் ஊடாக இந்த வரிசை யுகமும் ,பொருளாதார நிலைமையும் அகன்றுவிட போவதில்லை.பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்ற மனோநிலமை ஒவ்வொரு மனிதனிடமும் இருக்குமானால் இதுவும் கடந்து போகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் .