பங்கீட்டு அட்டையின் பிரகாரம் பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளரின் கண்காணிப்பின் கீழ் அந்ததந்த பகுதி முகவர்கள் ஊடாக எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.