Welcome to Jettamil

மனித உரிமை ஆணைக்குழு – பாதுகாப்பு தரப்பு கலந்துரையாடல்!

Share

மனித உரிமை ஆணைக்குழு – பாதுகாப்பு தரப்பு கலந்துரையாடல்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (20) இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், பொலிஸ், இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மனித உரிமைச் சட்டங்கள் தொடர்பாகவும்,பாதுகாப்பு தரப்பினர் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாகவும், சிறு குற்றம், பாரிய குற்றங்கள் இடம்பெறும்போது விசாரணைகள் மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை