நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் த்ரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமக்கு முதல் சில மாதங்களில் மட்டுமே திரிபோஷ கிடைத்ததாக அப்பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் தெரிவித்துள்ளனர்.
மூலப்பொருட்கள் பற்றாக்குறையினாலேயே திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.