இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய சுகாதார அமைச்சரான சன்ன ஜயசுமன குறித்த விடயத்தை அறிவித்துள்ளார். அவரது அறிவித்தலின் படி வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியவேண்டிய கட்டாயம் இல்லை எனவும் ஆனால் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் வளாகம் ஒன்றுக்கு செல்லும் போது உடல் வெப்பநிலையை பரிசோதிக்க தேவையில்லை எனவும் வாடிக்கையாளர், பார்வையாளர் மற்றும் தனிநபர் விபரங்களை திரட்டுதல் அவசியமில்லை எனவும் அறிவித்துள்ளார். குறித்த அறிவித்தல்கள் இன்று முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.