2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக் கல்விச்செயற்பாடுகள் இன்றும் முதல் ஆரம்பமாகின்றது.
அனைத்து தரங்களுக்கு மான கற்பித்தல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட போதிலும், 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தரம் மே மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இன்று பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளதால் பாடசாலை வகுப்பறைகளை துப்பரவு செய்யும் பணி நேற்று பெற்றோர் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இதேவேளை,பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து போக்குவரத்து சேவைகளும் இன்று ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பயணிகள் போக்குவரத்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தனியார் பேருந்துகள் இன்று முதல் வழமை போன்று இயங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் இன்று முதல் வழமை போன்று பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் என பாடசாலை போக்குவரத்து சங்கங்கள் தெரிவித்துள்ளன.