மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த தகவலை பொது மக்களுக்கு முக்கூட்டியே அறிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அதிகரிப்பானது மின்சார சபையின் வருமானம் மற்றும் செலவீனங்களை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் எனவும் , மின் கட்டணம் தொடர்பில் மதிப்பீடு செய்த பின்னர் அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் மக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு மின் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் எரிவாயு, எரிபொருள், பால்மா போன்று நள்ளிரவுகளில் விலைகளை அதிகரித்தது போல மின்கட்டணத்தையும் அதிகரித்து மக்களுக்கு சுமையை ஏற்படுத்தமாட்டோம் எனவும் இதனால் மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.