கடவுளுக்கு நேர்ந்து காசுகட்டிய துணியை சிலிண்டரில் கட்டி சமையலில் ஈடுபட்டு வருகின்ற சம்பவமொன்று மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் எரிவாயு சிலிண்டர் அடுப்புகள் வெடித்துவரும் நிலையில் புதிதாக வாங்கிய காஸ் சிலின்டர் வெடிக்க கூடாதென இவ்வாறான ஆன்மிக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனையின் போது கசிப்புடன் பெண்ணொருவரை கைது செய்தனர். இதன்போது வீட்டின் சமையலறையில் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்த எரிவாயு சிலிண்டரில், மஞ்சல் துணியொன்றில் காசு கட்டப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸார் விசாரித்தபோது எரிவாயு சிலிண்டர் அடுப்பு வெடித்துவிடக் கூடாதென கடவுளுக்கு நேர்ந்து காசு கட்டியுள்ளதாக அப்பெண் விளக்கமளித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.