முல்லைத்தீவு – உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி மூங்கிலாறு கிராம மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்களுக்குப் பின்னர் கைவிடப்பட்ட வளவு ஒன்றிலிருந்து சிறுமி நிதர்சனா சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்த போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என பிரேத பரிசோதனையின் போது, தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த கோரியும்,
கொலை செய்யப்பட்ட சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மூங்கிலாறு சந்தியிலிருந்து பேரணியாக உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாக சென்று கறுப்பு கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.