உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் ராணுவ தளங்களை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்யா நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தது.
நேற்று இரண்டாவது நாளாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் மைஹொலெவ் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதி அருகே அமைக்கப்பட்டுள்ள உக்ரைன் ராணுவத்தின் எரிபொருள் சேமிப்பு கிடங்கை குறிவைத்து அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனிய வான்வெளியில் உக்ரைனியப் போர்விமானங்கள் தடையின்றிப் பறக்கின்றன என்றும், ரஷ்யா இன்னமும் உக்ரைனிய வான்பரப்பை கைப்பற்றவில்லை என்றும், CNN செய்தியாளர் குழு தெரிவித்துள்ளது.
மிக மெதுவாக, தாழ்வான நிலையில் பறந்து கொண்டிருந்த போர் விமானங்களை உக்ரைனியத் துருப்புகள் எதுவும் செய்யாமல் விட்டதாகவும், CNN செய்தியாளர்கள் அவதானித்துள்ளனர்.
உக்ரைனியப் போர் விமானங்கள் பறந்து சென்றதைக் கண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.