Welcome to Jettamil

கோடியக்கரையில் கரையொதுங்கிய இலங்கைப் படகு

Share

தமிழ்நாடு – நாகை மாவட்டம்,  கோடியக்கரை மீன்பிடித் துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், காத்தான் ஓடை கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு நேற்று காலை கரையொதுங்கியுள்ளது.

மீனவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைவாக,  கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரிகள், OFRP-A-0851 KCH என்ற இலக்கம் உடைய குறித்த படகை கைப்பற்றியுள்ளனர்.

கரையொதுங்கிய படகு, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த படகா அல்லது கடத்தல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் படகா, இதில் யாரும் வந்தனரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுங்கத்துறை அதிகாரிகள், கியூ பிராஞ்ச் காவல்துறையினர் மற்றும் கடலோரப் பாதுகாப்பு குழுவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை