Welcome to Jettamil

சர்வகட்சி மாநாட்டை பெரும்பாலான கட்சிகள் புறக்கணிப்பு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கூட்டப்படும் சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக பெரும்பாலான கட்சிகள் அறிவித்துள்ளன.

நாட்டின் தற்போதைய நெருக்கடி குறித்து ஆராய, நாளை சர்வகட்சி மாநாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், கட்சிகளுக்கு இந்த மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்ரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,  ரெலோ, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் சுமந்திரன் ஆகியோரும், ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், அரசின் பங்காளிக் கட்சிகளின் சார்பில், திஸ்ஸ விதாரண மற்றும் அதுரலியே ரத்தன தேரர் ஆகியோரும் மட்டுமே இந்த சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்கு அரசாங்கம் இந்த மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதால் பெரும்பாலான கட்சிகள் சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பை நிராகரித்துள்ளன.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரசும், சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது புதிய திருப்பமாக அமைந்துள்ளது.

அதேவேளை, அரசாங்கத்துடன் முரண்பட்டுள்ள 10 பங்காளிக் கட்சிகளில் பெரும்பாலானவை, சர்வகட்சி கூட்டத்தை புறக்கணிப்பதுடன், இரண்டு பிரதிநிதிகளை மட்டும் அனுப்ப முடிவு செய்துள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை