நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையல் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.
பின்வரும் வலயங்களில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L காலை 08 மணிமுதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 06 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
அது போன்று P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில், காலை 09 மணிமுதல் மாலை 05 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணிநேரமும், மாலை 5 மணி முதல் இரவு 09 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளது.