ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார்.
சென்னை அணியின் புதிய கப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26ம் திகதி தொடவங்குகிறது.
முதல் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை அணியும், கோல்கட்டா அணியும் மோதுகின்றன.
கடந்த தொடரில் கோப்பையை வென்றதும் சென்னை அணி கப்டனாக இருந்த டோனி, ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடப்பு சீசனிலும் கலந்து கொள்வதாகவும், சென்னை மைதானத்தில் தான் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பேன் எனவும் அறிவித்தார்.
அதன்படி, இந்த ஆண்டும் சென்னை அணி டோனி தலைமையின் கீழ் களமிறங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில், சென்னை அணிக்கு கப்டனாக ரவீந்திர ஜடேஜாவை அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
மேலும், டோனி, சென்னை அணியின் வீரராக மட்டும் தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோனியை கப்டன் பதவியில் இருந்து மாற்றி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.