உக்ரைன்-ரஷ்யா போரில் யாருக்கும் வெற்றி இல்லை. போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினார்.
பின்னர் கருத்து வெளியிட்ட அவர்,
இருநாடுகளின் தனிப்பட உறவுகளில் இந்தியா உறுதியாக உள்ளது. உலக பொருளாதாரத்தில் கொரோனா பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவுகளை நாம் தீவிரமாக எதிர்கொண்டோம். ரஷ்யா- உக்ரைன் போரால் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.