Welcome to Jettamil

தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அநுர அரசின் அமைச்சர் உறுதி

Share

தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அநுர அரசின் அமைச்சர் உறுதி

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என்று சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

நேற்று (அக்டோபர் 9) நாடாளுமன்ற விவாதத்தின்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் நீதி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்குரிய சிறந்த தீர்வு ஓரிரு வாரங்களில் முன்வைக்கப்படும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் குறிப்பிடுவதுபோல இந்த விடயத்துக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்தால், அது மத மோதல்களையே ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

“சுவிட்ஸர்லாந்தின் பெடரல் பற்றிப் பேசிப் பயனில்லை. சகல பிரச்சினைகளுக்கும் இங்கிருந்தவாறு தான் பேச்சுவார்த்தை ஊடாகத் தீர்வு காண வேண்டும். அதனை மறந்து விடக்கூடாது” என்று தெரிவித்தார்.

எமக்கு எதிராகப் பேசும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தாம் தீர்வு பெற்றுக் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை